தாயை பிரிந்து பரிதவித்த யானை குட்டியை தாயுடன் சேர்த்த நீலகிரி வனத்துறை ஊழியர்கள்...!

பந்தலூர் சரகத்தில் உள்ள கிளாண்ட் ராக் வனப்பகுதியில் பரிதவித்து வந்த குட்டியானையின் பிளறல் சத்தம் கேட்டு வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானை மற்றும் சக யானைகள் குட்டியை மீண்டும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றன.


நீலகிரி: நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் யானை அதிக அளவில் கூட்டமாக வாழும் இடங்களில் ஒன்று கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி. அதிக வனப்பரப்பு இருப்பதால் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்விடமாக இது திகழ்கின்றன தற்பொழுது இந்த வன பகுதிக்கு ஏராளமான யானை கூட்டங்கள் குட்டிகளுடன் உலா வருகின்றன.

இந்நிலையில் பந்தலூர் சரகத்தில் உள்ள கிளாண்ட் ராக் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வரும் பழங்குடியினர், யானை குட்டி ஒன்று நடக்க முடியாமல் படுத்திருப்பதை பார்த்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பிறந்து சுமார் 3 மாதங்களே ஆன ஆண் குட்டி யானையை மீட்டனர்.

பின்னர் வனப்பகுதி முழுவதும் குழுக்கள் அமைத்து அந்த குட்டி யானையின் தாய் யானையை தீவிரமாக தேடினர். இந்த நிலையில் குட்டி யானை மிகவும் சோர்வாக காணபட்டதால் தண்ணீர் மற்றும் பால் கொடுத்தனர். இதனால், குட்டி யானை எழுந்து நின்றது.

இதனிடையே, நீண்ட நேரத்திற்குப் பிறகு குட்டியின் பிளறல் சத்தம் கேட்டு வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானை மற்றும் சக யானைகள் குட்டியை மீண்டும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றன. வனத்துறையினரும் அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பரிதவித்த குட்டி யானையை பாசத்துடன் அரவனைத்து தாயுடன் சேர்த்த வைத்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...