தாயை பிரிந்து பரிதவித்த யானை குட்டியை தாயுடன் சேர்த்த நீலகிரி வனத்துறை ஊழியர்கள்...!

பந்தலூர் சரகத்தில் உள்ள கிளாண்ட் ராக் வனப்பகுதியில் பரிதவித்து வந்த குட்டியானையின் பிளறல் சத்தம் கேட்டு வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானை மற்றும் சக யானைகள் குட்டியை மீண்டும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றன.


நீலகிரி: நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் யானை அதிக அளவில் கூட்டமாக வாழும் இடங்களில் ஒன்று கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி. அதிக வனப்பரப்பு இருப்பதால் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்விடமாக இது திகழ்கின்றன தற்பொழுது இந்த வன பகுதிக்கு ஏராளமான யானை கூட்டங்கள் குட்டிகளுடன் உலா வருகின்றன.

இந்நிலையில் பந்தலூர் சரகத்தில் உள்ள கிளாண்ட் ராக் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வரும் பழங்குடியினர், யானை குட்டி ஒன்று நடக்க முடியாமல் படுத்திருப்பதை பார்த்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பிறந்து சுமார் 3 மாதங்களே ஆன ஆண் குட்டி யானையை மீட்டனர்.

பின்னர் வனப்பகுதி முழுவதும் குழுக்கள் அமைத்து அந்த குட்டி யானையின் தாய் யானையை தீவிரமாக தேடினர். இந்த நிலையில் குட்டி யானை மிகவும் சோர்வாக காணபட்டதால் தண்ணீர் மற்றும் பால் கொடுத்தனர். இதனால், குட்டி யானை எழுந்து நின்றது.

இதனிடையே, நீண்ட நேரத்திற்குப் பிறகு குட்டியின் பிளறல் சத்தம் கேட்டு வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானை மற்றும் சக யானைகள் குட்டியை மீண்டும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றன. வனத்துறையினரும் அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பரிதவித்த குட்டி யானையை பாசத்துடன் அரவனைத்து தாயுடன் சேர்த்த வைத்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...