கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞர் பட்டம் பெற்ற மாணவி..! நீதிபதியாகி மலைவாழ் மக்களுக்கு உதவுவதே லட்சியம்

கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞராக பட்டம் பெற்ற காளியம்மாள், தான் நீதிபதியாக தேர்வு பெற்று பழங்குடியின மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதே லட்சியம் என தெரிவித்துள்ளார்.


கோவை: நீதிபதியாக தேர்வு பெற்று பழங்குடியின மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதே தனது லட்சியம் என கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞர் பட்டம் பெற்ற மாணவி காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் காரமடை அடுத்த தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனாரி கிராமத்தில் ஏராளமான மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மருதன் - ஆண்டிச்சி தம்பதியின் மகள் காளியம்மாள்(30). இவர் கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞர் பட்டத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் காளியம்மாள் பேசியதாவது, கோப்பனாரி மலைவாழ் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள குழந்தைகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள துவக்கப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் உயர்கல்வி பயில ஆனைகட்டி அல்லது தோலம்பாளையம் செல்ல வேண்டும். இப்பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை.

நான் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கோப்பனாரி அரசு துவக்கப் பள்ளியிலும், 6-10 வரை வரை ஆனைகட்டி அரசு பள்ளியிலும் படித்தேன். நான் எட்டாவது படிக்கும் போது எங்கள் கிராமத்துக்கு வந்த வழக்கறிஞர் ஒருவரை பார்த்து தான், வழக்கறிஞருக்கு படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. கோவை அரசு கலை கல்லுாரியில் பி.ஏ.,பொருளாதாரம் படித்து பட்டம் பெற்றேன். பின்னர் எல்.எல்.பி., படிக்க விண்ணப்பித்தேன்.

முதல் இரண்டு ஆண்டுகள் மதுரை சட்டக்கல்லுாரியில் படித்தேன். எனது தந்தையின் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், வழக்கறிஞர் படிப்பு தடைபடும் நிலை ஏற்பட்டது. பலரின் உதவியோடு கோவை அரசு சட்டக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து, கடந்த, ஆகஸ்டு 30ஆம் தேதி, எல்.எல்.பி., பட்டம் பெற்றேன்.

பள்ளி, கல்லுாரி விடுமுறை நாட்களில் ஆடு மேய்த்தும், விவசாய கூலி வேலைக்கு சென்றும், அதில் கிடைக்கும் வருவாயை வைத்தும் படித்தேன். மாலையில் எங்கள் கிராம குழந்தைகளுக்கு பாடம் பயிற்று விப்பேன்.

நீதிபதிகளுக்கான தேர்வு எழுத திட்டமிட்டுள்ளேன். நீதிபதியாக தேர்வாகி மலைவாழ் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வதே எனது லட்சியம்.

இவ்வாறு வழக்கறிஞர் காளியம்மாள் கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...