இடையர்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்து - போக்குவரத்து பாதிப்பு..!

தடாகம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக இடையர்பாளையம் அருகேயுள்ள சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பேருந்து சிக்கிக் கொண்டதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கிரேன் கொண்டு பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



கோவை: இடையர்பாளையம் அருகே தடாகம் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதான மாநில நெடுஞ்சாலையான தடாகம் சாலையின் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாசலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் அங்கு பள்ளம் தொண்டப்பட்டு வேலை நடப்பது தொடர்பாக முறையாக எந்த அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதை அறியாமல் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அந்த பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறக்கிவிட்டு பேருந்தை கிரேன் மூலம் பேருந்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



தடாகம் சாலையில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் கடும் தூசி பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பேருந்து பள்ளத்திற்குள் சிக்கியதை தொடர்ந்து தடாகம் சாலையில் அப்பகுதி மக்களே தாமாக முன்வந்து வாகன போக்குவரத்தை மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...