கோவை மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற அரசு உறுதி மொழி குழுவினர் ஆய்வு..!

சங்கராயபுரம் எம்.எல்.ஏவும், சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு தலைவருமான உதயசூரியன் தலைமையிலான குழுவினர் கோவை அரசு மருத்துவமனை, தீயணைப்பு மீட்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுவினர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதி மொழிக்குழுவின் தலைவரும், சங்கராயபுரம் எம்.எல்.ஏவுமான உதயசூரியன் தலைமையில் நடைபெற்று வரும் ஆய்வின் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தனர்.



இதனை தொடர்ந்து, மருதமலை கோவிலில் லிப்ட் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும், ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை மேம்படுத்துவது குறித்தும், கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் சுமார் 152.95 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...