கோவையில் கொடுத்த பணத்தை கேட்டவரை பீர் பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது

பணத்தை திருப்பி கேட்டதால், சமையல்காரரை பீர் பாட்டிலால் குத்திய ஆறுமுகத்தை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் முருகானந்தம் (31). இவர் நஞ்சுண்டாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், சமையல்காரராகவும் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (33) என்பவருக்கு ரூ. 8 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். ஆனால், ஆறுமுகம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று, முருகானந்தம் பணத்தை திருப்பி கேட்டதால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பீர் பாட்டிலை உடைத்து முருகானந்தத்தின் மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடனை திருப்பி கேட்ட சமையல்காரரை பீர் பாட்டிலால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...