தமிழகத்திலேயே, கோவை சரகத்தில் தான் 15 மாதங்களில் 75 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது - போலீசாருக்கு டி.ஐ.ஜி., முத்துசாமி பாராட்டு..!

கொரோனா தொற்று காலத்தில், சிறப்பான பணியாற்றியதற்காக கோவை டி.ஐ.ஜி, முத்துசாமிக்கு ரோட்டரி சங்கம் சார்பாக விருது, வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய டி.ஐ.ஜி. முத்துசாமி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை சரகத்தில் தான், 75 போக்சோ வழக்குகளில், தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது, என்றார்.


கோவை: கோவை சரகத்தில் கடந்த 15 மாதங்களில், 75 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில், சிறப்பான பணியாற்றியமைக்கான கோவை டி.ஐ.ஜி., முத்துசாமிக்கு ரோட்டரி கிளப் சார்பாக விருது, வழங்கப்பட்டது. கோவை வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் பிரபு, செயலாளர் ராதாகிருஷ்ணன், திட்ட இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் இவ்விருதை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய டி.ஐ.ஜி முத்துசாமி, ரோட்டரி சங்கம் வழங்கிய இந்த விருது, கோவை சரகத்துக்கு கிடைத்த அங்கீகாரம். 4 எஸ்.பி.,க்கள், ஆயிரக்கணக்கான போலீசாரின் பணிக்கு கிடைத்த பாராட்டாக இதை கருதுகிறேன்.

கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணியை காட்டிலும், 'போக்சோ' வழக்குகளில் கோவை சரக போலீசார் தீவிரமாக பணியாற்றினர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை சரகத்தில் தான், 75 போக்சோ வழக்குகளில், தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதுவும், 20 வழக்குகளில், குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுக்கும் மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் சிக்கிய 50 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இரு வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், விருதும் ஊக்கப்பரிசும் வழங்கப்படும் என்று, அறிவிப்பு வெளியிட்டேன். அதன்படி, 10 இன்ஸ்பெக்டர்கள், சிறப்பாக பணியாற்றி விருது பெற்றுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதில், கோவை சரகம் முன்னணியில் உள்ளது. ரோட்டரி சங்கத்தின் விருதும், பாராட்டும், இந்த சரகத்தில் பணியாற்றும் காவலர் முதல் எஸ்.பி., வரை அனைவருக்கும் உரியதாகும்.

இவ்வாறு, டி.ஐ.ஜி. பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...