கொசவம்பாளையம் பிரிவில் 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: பல்லடத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நெசவு தொழில் அமைப்பினர் பலரும் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மின் கட்டண உயர்வு ஜவுளி உற்பத்தி தொழிலை பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளதாக கூறி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொசவம்பாளையம் பிரிவில் 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக சுமார் 11 கோடி ரூபாய் அளவிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கைகள்
* தமிழக அரசின் 30 சதவீத மின் கட்டண உயர்வால், யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 காசு முதல் இரண்டு ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதை செலுத்த முடியாது.
* உயர் மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கான நிர்ணய கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
* புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
* நாடா இல்லா தறி நெசவுத்துறைக்கு என தனி மின்சாரம் அளித்து ஊக்கமளிக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.