மின் கட்டண உயர்வு: பல்லடத்தில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்கம் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம்

கொசவம்பாளையம் பிரிவில் 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: பல்லடத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நெசவு தொழில் அமைப்பினர் பலரும் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில், மின் கட்டண உயர்வு ஜவுளி உற்பத்தி தொழிலை பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளதாக கூறி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொசவம்பாளையம் பிரிவில் 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த போராட்டம் காரணமாக சுமார் 11 கோடி ரூபாய் அளவிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைகள்

* தமிழக அரசின் 30 சதவீத மின் கட்டண உயர்வால், யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 காசு முதல் இரண்டு ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதை செலுத்த முடியாது.

* உயர் மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கான நிர்ணய கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

* புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

* நாடா இல்லா தறி நெசவுத்துறைக்கு என தனி மின்சாரம் அளித்து ஊக்கமளிக்க வேண்டும்

என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...