சின்னியம்பாளையம் வழியாக சூலூர் கரையான்பாளையம் பகுதியில் நின்றிருந்த காட்டு மாட்டை, வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொக்லைன் மூலம் தூக்கிச் சென்று தடாகம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
கோவை: கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் பகுதி அருகில் சகாரா சிட்டி எனப்படும் இடத்தில் நேற்று காலை ஒரு காட்டு மாடு நடமாடுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின்பேரில், கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் காட்டு மாடு குறித்து விசாரித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சரவணம்பட்டியை அடுத்துள்ள விநாயகபுரம் பகுதியில் அந்த காட்டுமாடு இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு மாட்டை பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 வரை சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி வரை பின் தொடர்ந்த நிலையில், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியிலிருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்ற காரணத்தினால் அதனை பின் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர், சின்னியம்பாளையம் வழியாக சூலூர் கரையான்பாளையம் பகுதியில் நின்றிருந்த காட்டு மாட்டை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

அதனை பொக்லைன் மூலம் தூக்கிச் சென்று தடாகம் வனப்பகுதியில், வனத்துறையினர் பத்திரமாக விடுவித்தனர்.
தொடர்ந்து, நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சரவணம்பட்டியை அடுத்துள்ள விநாயகபுரம் பகுதியில் அந்த காட்டுமாடு இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு மாட்டை பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 வரை சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி வரை பின் தொடர்ந்த நிலையில், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியிலிருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்ற காரணத்தினால் அதனை பின் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர், சின்னியம்பாளையம் வழியாக சூலூர் கரையான்பாளையம் பகுதியில் நின்றிருந்த காட்டு மாட்டை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதனை பொக்லைன் மூலம் தூக்கிச் சென்று தடாகம் வனப்பகுதியில், வனத்துறையினர் பத்திரமாக விடுவித்தனர்.