கோவையில் வழி தவறி நகர்ப்பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

சின்னியம்பாளையம் வழியாக சூலூர் கரையான்பாளையம் பகுதியில் நின்றிருந்த காட்டு மாட்டை, வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொக்லைன் மூலம் தூக்கிச் சென்று தடாகம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் பகுதி அருகில் சகாரா சிட்டி எனப்படும் இடத்தில் நேற்று காலை ஒரு காட்டு மாடு நடமாடுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின்பேரில், கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் காட்டு மாடு குறித்து விசாரித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சரவணம்பட்டியை அடுத்துள்ள விநாயகபுரம் பகுதியில் அந்த காட்டுமாடு இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு மாட்டை பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 வரை சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி வரை பின் தொடர்ந்த நிலையில், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியிலிருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்ற காரணத்தினால் அதனை பின் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது.



பின்னர், சின்னியம்பாளையம் வழியாக சூலூர் கரையான்பாளையம் பகுதியில் நின்றிருந்த காட்டு மாட்டை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



அதனை பொக்லைன் மூலம் தூக்கிச் சென்று தடாகம் வனப்பகுதியில், வனத்துறையினர் பத்திரமாக விடுவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...