கோவையில் பாதாள சாக்கடை தொட்டியில் விழுந்ததால் நடக்க முடியாத நிலைக்குச் சென்ற சிறுவன் - உதவி கோரி ஆட்சியரிடம் முறையிட்ட தாய்…!

கடந்த 2017 ஆம் ஆண்டு தடாகம் சாலை பால் கம்பனி பகுதியில் மூடாமல் இருந்த மாநகராட்சி பாதாள சாக்கடை தொட்டியில் சிறுவன் தவறி விழுந்துள்ளான். சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவனால் நடக்கவே முடியாமல் போயுள்ளது. தந்தையும் இறந்து விட்டதால், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க உதவ ஆட்சியரிடம், தாய் கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி பாதாளச் சாக்கடை தொட்டியில் விழுந்ததால் நிரந்தரமாக நடக்க முடியாத நிலையில் உள்ள சிறுவனுக்கு உரிய சிகிச்சையளிக்க உதவி செய்யக் கோரி சிறுவனின் தாய், கோவை ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டார்.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்-தம்பதி. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் மற்றும் 13 வயதில் மகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தடாகம் சாலை பால் கம்பனி பகுதியில் வசித்து வந்த போது, மகன் ஶ்ரீகுமார் மூடாமல் இருந்த மாநகராட்சி பாதாள சாக்கடை தொட்டியில் தவறி விழுந்தார். அப்போது, சிறுவனுக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னும், நடக்க சிரமப்பட்டு வந்த சிறுவன், கடந்த சில ஆண்டுகளாக நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் பல்வேறு தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை, சித்தா உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்தார். இந்த சூழலில், கடந்த 4 மாதங்களுக்கு முன் சிறுவன் தந்தை விஜயகுமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால், மிகுந்த பொருளாதார சிரமத்துடன் சிறுவன் ஶ்ரீகுமாரை சுமந்தவாறு தாய் கார்த்திகா மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.

இதனிடையே, சிறுவனுக்கு மரபனு பாதிப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



தன் மகனுக்கு மருத்துவ உதவி கோரி, இன்று ஆட்சியர் அலுவலகத்திறகு வந்த கார்த்திகா ஆட்சியரை நேரில் சந்தித்து உதவ கோரினார். உடனடியாக ஆட்சியர் சிறுவன் பிரச்சனை தொடர்பான சிறப்பு மருத்துவரை சந்திக்க ஏற்பாடுகளை செய்தார், மேலும், உரிய சிகிச்சைக்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...