ஆனைகட்டி மலையின் விளிம்பில் கால் தவறி விழுந்து பெண் யானை உயிரிழந்த சோகம்.!

நேற்றிரவு அட்டப்பாடியில் உள்ள மலைப்பாதையின் விளிம்பில் யானைக்கூட்டம் நடந்து சென்ற போது, ஒரு பெண் யானை கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி விளிம்பில் கால் தவறி விழுந்து பெண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைக்கட்டி அடுத்த கேரளப்பகுதியான அட்டப்பாடி, அகலி, பசுமை பள்ளத்தாக்குப் பகுதியில் காட்டு யானைகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. இந்த யானைகள் உணவிற்காகவும் வலசை செல்லவும் தமிழ்நாடு - கேரள வனப்பகுதிக்குள் மாறி மாறி வருவது வழக்கம்.

இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள மலைப்பகுதி வழியாக யானைக்கூட்டம் ஒன்று நேற்று(செப்.18) இரவு வந்துள்ளது. அப்போது மலையின் விளிம்பில் யானைக்கூட்டம் சென்ற போது பெண் யானை ஒன்று கால் தவறி மலை பாதையின் பள்ளத்தில் விழுந்துள்ளது.

மலையில் இருந்து கீழே விழுந்த யானை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அட்டப்பாடி வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.

மேலும், கூட்டத்தில் இருந்த வேறு ஏதாவது யானை இதே போல், தவறி விழுந்துள்ளதா..? எனவும் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...