வார்டு 86: ஆரம்ப சுகாதார நிலையத்தில், நிரந்தர மருத்துவரை பணியமர்த்த வேண்டும் - தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி

ஆரம்ப சுகாதார நிலையத்தில், நிரந்தர மருத்துவரை பணியமர்த்தவும், ராஜவாய்க்கால தூர்வார தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம், ராஜ வாய்க்கால் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.



கோவை மாநகராட்சியின் 86வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் இன்று ஆய்வு நடைபெற்றது. முதலாவதாக, 86வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், நிரந்தர மருத்துவர்கள் நியமனம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இதனையடுத்து, குப்பையும், சகதியுமாக இருந்த ராஜ வாய்க்காலை ஆய்வு செய்தார்.



தூர்வார இடையூறாக உள்ள, சூப்பர் கார்டன், சூப்பர் அவென்யூ, பொன்விழா நகர், குழந்தை கவுண்டர் வீதி, ராயல் நகர், திப்பு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, ராவுத்தர் வீதியில் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த அவர், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதேபோல், ஆசாத் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து புதிதாக கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஆசாத் நகர் பகுதியில் மைதானத்தில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆய்வின் போது, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை, 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ. அஹமது கபீர், மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...