கோவை பேரூர் மாதம்பட்டி அருகே 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்…!

தங்கள் பகுதிக்கு சரிவர அரசு பேருந்து இயக்கப்டாததை கண்டித்து கோவை பேரூர் மாதம்பட்டி அருகே 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: கோவை பேரூர் அடுத்த கரடிமடை, சென்னனூர், மத்திபாளையம், தண்ணீர் பந்தல், உள்ளிட்ட கிராம பகுதிக்குள் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள், சரிவர இயக்கப்படாததாக அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.



இந்நிலையில் அரசு பேருந்துகளை கரடிமடை, சென்னனூர், மத்திபாளையம், தண்ணீர் பந்தல் பகுதிகளில் முறையாக இயக்க கோரியும், போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்தும் அப்பகுதி மக்கள் திடிரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்டாதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லக்கூடிய நேரங்களில் அரசு பேருந்துகள் வராததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று மாதம்பட்டி பகுதியில் பேருந்து ஏறி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோரும் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், உடனடியாக இந்த 4 கிராமங்களுக்கும் முறையாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.



தகவல் அறிந்து வந்த பேரூர் காவல்துறையினர் கிராம மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சமந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு பிரச்சனையை எடுத்து செல்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.



காலை நேரத்தில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டு அவ்வழியாக வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...