ரத்தினபுரி, டாடாபாத் அருகே பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டைகள் என மொத்தம் 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
கோவை: கோவை ரத்தினபுரி, டாடாபாத் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒரு சிறுவன், 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி, டாடாபாத் 9வது வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன.
இதையடுத்து, போதை மாத்திரைகள் வைத்திருந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (18), தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வரும் தனபாலன் (19), போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யும் மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் (49) மற்றும்16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டைகள் என மொத்தம் 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
மேலும், சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மாத்திரை, வலி நிவாரண மாத்திரை, நரம்பு நோய் பாதிப்புக்கான மாத்திரைகளை போதைக்காக மாணவர்களுக்கு வழங்கியதும், 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
தெரியவந்தது.
போதை மாத்திரைகளை வாங்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில், வகுப்பறையில் பயன்படுத்தியும், போதை மாத்திரை தேவைப்படும் நபர்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு மாத்திரை வழங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி, டாடாபாத் 9வது வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன.
இதையடுத்து, போதை மாத்திரைகள் வைத்திருந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (18), தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வரும் தனபாலன் (19), போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யும் மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் (49) மற்றும்16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டைகள் என மொத்தம் 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
மேலும், சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மாத்திரை, வலி நிவாரண மாத்திரை, நரம்பு நோய் பாதிப்புக்கான மாத்திரைகளை போதைக்காக மாணவர்களுக்கு வழங்கியதும், 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
தெரியவந்தது.
போதை மாத்திரைகளை வாங்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில், வகுப்பறையில் பயன்படுத்தியும், போதை மாத்திரை தேவைப்படும் நபர்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு மாத்திரை வழங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.