மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்யும் வகையில் சைக்கிள் கிளப் மற்றும் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - உதவி காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

நாட்டுக்கும், உடலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்க கூடிய போதைப் பொருள் பயன்பாடு குறித்து மாணவர்கள் 9498181212 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம் - உதவி காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்


கோவை:மருத்துவ மாணவர்கள் சைக்கிளில் சென்று கிராமங்களில் சேவை செய்ய வசதியாக கோவை தனியார் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சைக்கிள் கிளப்பை உதவி காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் துவங்கி வைத்தார்.

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள என்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரிவளாகத்தில் மருத்துவ மாணவர்கள் சைக்கிளில் சென்று சேவையாற்றிட வசதியாக சைக்கிள் கிளப் ஒன்றை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, இந்த சைக்கிள் கிளப்பின் துவக்க விழா மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்ரவிச்சந்திரன் தலைமை தாங்கி மருத்துவ மாணவர்களின் சைக்கிள் கிளப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மாணவர்களிடையே போதைப் பழக்கம் தற்போது அதிகரிப்பது வேதனைக்குரிய ஒன்று. சமுதாய சீரழிவுக்கு போதைப்பொருள் முக்கிய பங்களிக்கிறது. இவற்றை தடுக்க படிக்கும் மாணவ மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போதைப் பொருள் பயன்படுத்துவோரை கண்டறிந்து காவல்துறை கண்ட்ரோல் ரூம் தொடர்பு எண் 9498181212தகவல் தெரிவிக்கலாம். அழைப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும்.

சிறந்த சமுதாயம் உருவாக மாணவச் செல்வங்கள் தங்கள் படிக்கும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல், சமுதாயப்பணி இவற்றில் கவனம் செலுத்தலாம்."

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அலுவலர்கள்,இந்தியன் ரயில்வே துறையின் பயிற்சித்துறை மேலாளர், தமிழ்நாடு சைக்கிள் கிளப் அசோசியேசன் பயிற்சியாளர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...