பொள்ளாச்சி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல்குளத்தில் இறந்து கிடந்த கோவை தனியார் நிறுவன ஊழியர்; போலீசார் விசாரணை

கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பவர் நண்பர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இரவு மது அருந்திய நிலையில், காலையில் அவரது நண்பர்கள் பார்த்த போது, நீச்சல் குளத்தில் இறந்த நிலையில் தலைகுப்புற கிடந்துள்ளார்.



கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல்குளத்தில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34) இவர், தனியார் சர்வீஸ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று சீனிவாசன் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்குவதற்காக நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது, நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், இன்று காலை சீனிவாசனை மட்டும் காணாததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தேகத்தின் பேரில் நீச்சல் குளத்தில் அவரை தேடி பார்த்த போது தலை குப்புற நிலையில் சீனிவாசன் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை உடனடியாக தண்ணீரில் இருந்து மீட்டு, இது குறித்து கோவையில் வசிக்கும் சீனிவாசனின் தந்தை ஆனந்த நாராயணனுக்கு நண்பர்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஆழியாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...