கோவையில் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் - வானதி சீனிவாசன்

ஆட்சி அமைந்து பல மாதங்கள் ஆகியும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. கேட்டால் டெண்டர் வரவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நாங்கள் முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.



கோவை: குப்பைகள் அகற்றப்படாமல், கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் கொசுக்கள் அதிகமாகி பல்வேறு காய்ச்சல்கள் பரவ காரணமாக உள்ளது. ஆட்சி அமைத்து பல நாட்கள் ஆகியும், இன்னும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை, கேட்டால் மருந்துகள் ஸ்டாக் இல்லை என்றும் டெண்டர் வரவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், மறு புறம் திமுக அமைச்சர்கள் இது முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் என்று கோவையில் வானதி சீனிவாசன் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமலிங்க காலனியில் பா.ஜ.க வின் மக்கள் சேவை மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதில், கலந்து கொண்ட பயனாளிகளிடம், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துரையாடினார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்க்கான காரணத்தை தடுக்காமல், தற்காலிக நடவடிக்கையை அரசு செய்து வருகிறது

குப்பைகள் அகற்றப்படாமல், கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் நோய்கள் பரவ காரணமாக அமைகிறது. ஆட்சி அமைத்து பல நாட்கள் ஆகியும், இன்னும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. கேட்டால் டெண்டர் வரவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நாங்கள் முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.

உடனடியாக அரசு பள்ளிகள் மற்றும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ள குடிசை பகுதிகளில் தேவையான மருத்துவ முகாமைக் ஏற்படுத்த வேண்டும்.

கோவையில் உள்ள வாலாங்குளத்தில் டீசல் படகு சவாரி விடுவதால் அங்கு மீன்கள் செத்து மிதக்கிறது. கோவையில் ஆமை வேகத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

கோவை தெற்கு தொகுதியில் கமல் நேற்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார். அப்போது, கழிப்பறை கட்டி தருகிறேன், சுத்தம் செய்கிறேன் என்று மக்களிடம் சொல்லியிருக்கிறார். நான் வேண்டுமானால் எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது.என்று லிஸ்ட் தருகிறேன், அதையெல்லாம் தீர்த்து வைக்கட்டும்.

அவர் தான் இப்போது உதயநிதியோடு ரொம்ப நெறுக்கமாக பழகி கொண்டிருக்கிறார். எனவே, அவரிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்போது தான் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு, அவர் செய்த உதவியாக இருக்கும்.

குறிப்பாக, உதயநிதியோடு படம் சம்பந்தமாக கமல் பேசும் போது, கோவை தெற்கு தொகுதி பிரச்சனையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

அமைச்சர்களை தாண்டி, பவராக இருப்பவர் உதயநிதி தான். நான் சட்டமன்றத்தில் நேரில் பார்க்கிறேன். முதல்வருக்கு வணக்கம் வைப்பதை விட, உதயநிதிக்கு தான் அனைவரும் முதலில் வணக்கம் வைக்கிறார்கள்.

தென்காசியில் நடந்த நவீன தீண்டாமை மிகவும் கண்டிக்கதக்கது. சாதி மறுப்பு பேசி கொண்டிருக்கின்ற தமிழகத்தில் இது போன்ற சம்பவம் வேதனையானது. இந்த போக்கு மாற வேண்டும்.

நாங்கள் மக்களுக்காக உழைக்கின்ற மோடி அவர்களின் பின்னால் இருப்பதால் நாங்கள் "மோடி மாடல்" என்று சொல்லிக் கொள்கிறோம். ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்த மாதிரி பெயர் வைத்து கொள்கிறார்கள். இதனால் தான், கோவையில் "காவி மாடல்" என்று போஸ்டர் ஒட்டப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...