கோவை மாவட்டத்தில் நாளை 1,530 இடங்களில், நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில், இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் நாளை (18.09.2022) 1,530 இடங்களில் கொரோனாதடுப்பூசி முகாமில் இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நாளை (18.09.2022) 1,530 இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம், நடத்தப்படவுள்ளது. கிராம பகுதிகளில் 1,081 இடங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் 340 இடங்களிலும், நகராட்சிகளில் 109 இடங்களிலும் முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசி 1.67 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே இலவசமாக போடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முகாம் குறித்துமாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, நாளை நடைபெறவுள்ள முகாமில், ஒரு நபர் கூட விடுபடாமல் இருக்கும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பணியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி பிரிவுகள், தனியார் பயிற்சி நிலைய செவிலியர்கள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பலர் ஈடுபட உள்ளனர். அரசு தடுப்பூசி மையங்களில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே அனைவரும் பூஸ்டர் தடுப்பு செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசினார்.
தமிழகம் முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நாளை (18.09.2022) 1,530 இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம், நடத்தப்படவுள்ளது. கிராம பகுதிகளில் 1,081 இடங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் 340 இடங்களிலும், நகராட்சிகளில் 109 இடங்களிலும் முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசி 1.67 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே இலவசமாக போடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முகாம் குறித்துமாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, நாளை நடைபெறவுள்ள முகாமில், ஒரு நபர் கூட விடுபடாமல் இருக்கும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பணியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி பிரிவுகள், தனியார் பயிற்சி நிலைய செவிலியர்கள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பலர் ஈடுபட உள்ளனர். அரசு தடுப்பூசி மையங்களில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே அனைவரும் பூஸ்டர் தடுப்பு செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசினார்.