தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகம் (தபெதிக), திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர், காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரத்தில் உள்ளபெரியார் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சி பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம்தந்தை பெரியார் திராவிட கழகம் (தபெதிக) அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை சுற்றியும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், பெரியார் சிலைக்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னன்,திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,சமூக நீதிக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம்தந்தை பெரியார் திராவிட கழகம் (தபெதிக) அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை சுற்றியும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், பெரியார் சிலைக்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னன்,திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,சமூக நீதிக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.