குன்னூர் மலை ரயிலை மறித்த கொம்பன் யானை - பீதியடைந்த மக்கள்: பரபரப்பு..!

குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை 12-வது குகை அருகே தண்டவாளத்தில் திடீரென வழிமறித்து நின்ற கொம்பன் யானையால் பயணிகளிடையே பரபரப்பான சூழல் நிலவியது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை ரயிலை கொம்பன் யானை திடீரென மறித்து நின்றதால், மலை ரயிலில் வந்த பயணிகள் பீதியடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக ஒற்றை கொம்பன் யானை உலா வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 3:20 மணிக்கு குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை 12-வது குகை அருகேயுள்ள தண்டவாளத்தில் கொம்பன் யானை திடீரென வழிமறித்து நின்றது.

இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக மலை ரயில் நகராமல் நின்றதால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர். மேலும் சிலர் ரயிலை மறித்து நின்ற யானையை தங்கள் செல்போன்களில் 'வீடியோ' எடுத்தனர்.

இந்நிலையில், கொம்பன் யானை வனப்பகுதிக்குள் சென்றதும் மலை ரயில் மேட்டுப்பாளையம் சென்றது. இந்த சம்பவம் காரணமாக பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...