குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை 12-வது குகை அருகே தண்டவாளத்தில் திடீரென வழிமறித்து நின்ற கொம்பன் யானையால் பயணிகளிடையே பரபரப்பான சூழல் நிலவியது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை ரயிலை கொம்பன் யானை திடீரென மறித்து நின்றதால், மலை ரயிலில் வந்த பயணிகள் பீதியடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக ஒற்றை கொம்பன் யானை உலா வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 3:20 மணிக்கு குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை 12-வது குகை அருகேயுள்ள தண்டவாளத்தில் கொம்பன் யானை திடீரென வழிமறித்து நின்றது.
இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக மலை ரயில் நகராமல் நின்றதால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர். மேலும் சிலர் ரயிலை மறித்து நின்ற யானையை தங்கள் செல்போன்களில் 'வீடியோ' எடுத்தனர்.
இந்நிலையில், கொம்பன் யானை வனப்பகுதிக்குள் சென்றதும் மலை ரயில் மேட்டுப்பாளையம் சென்றது. இந்த சம்பவம் காரணமாக பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக ஒற்றை கொம்பன் யானை உலா வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 3:20 மணிக்கு குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை 12-வது குகை அருகேயுள்ள தண்டவாளத்தில் கொம்பன் யானை திடீரென வழிமறித்து நின்றது.
இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக மலை ரயில் நகராமல் நின்றதால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர். மேலும் சிலர் ரயிலை மறித்து நின்ற யானையை தங்கள் செல்போன்களில் 'வீடியோ' எடுத்தனர்.
இந்நிலையில், கொம்பன் யானை வனப்பகுதிக்குள் சென்றதும் மலை ரயில் மேட்டுப்பாளையம் சென்றது. இந்த சம்பவம் காரணமாக பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.