ஆழியார் அருகே பாம்பு கடித்து வேட்டை தடுப்பு காவலர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

ஆழியார் சின்னார்பதி வனகிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்ற வேட்டை தடுப்பு காவலர், கவியருவி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பாம்பு கடித்து மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே பாம்பு கடித்து வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே ஆழியார் சின்னார்பதி வனகிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (29). இவர் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல ஆழியார் கவியருவி அருகே உள்ள வில்லோனி பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போது, எதிர்பாராத விதமாக பச்சை பாம்பு ஒன்று ரவிச்சந்திரனை கடித்ததாக தெரிகிறது.

பின்னர், அருகில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அவரை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், பச்சை பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் அதிர்ஷ்டவசமாக, அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வனத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...