ஆழியார் அருகே பாம்பு கடித்து வேட்டை தடுப்பு காவலர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

ஆழியார் சின்னார்பதி வனகிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்ற வேட்டை தடுப்பு காவலர், கவியருவி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பாம்பு கடித்து மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே பாம்பு கடித்து வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே ஆழியார் சின்னார்பதி வனகிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (29). இவர் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல ஆழியார் கவியருவி அருகே உள்ள வில்லோனி பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போது, எதிர்பாராத விதமாக பச்சை பாம்பு ஒன்று ரவிச்சந்திரனை கடித்ததாக தெரிகிறது.

பின்னர், அருகில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அவரை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், பச்சை பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் அதிர்ஷ்டவசமாக, அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வனத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...