மின்சார வாரியத்திற்காக 25 விழுக்காடு மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்கிறோம், அதனை 50 விழுக்காடாக உயர்த்துவதற்கான நோக்கத்திலேயே மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தபட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவை: மின்சார கட்டணத்தை வைத்து அரசியல் செய்வதாக, கோவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில் துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்கனவே கடன் சுமை இருந்தும், கடந்த 15 மாதங்களாக தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதற்கு காரணம், முதலமைச்சர் மட்டும்தான். இழுத்து மூட இருந்த மின்சார வாரியத்திற்கு 3500 கோடி மானியத்தை ஒப்புதல் அளித்து, கூடுதலாக 4000 கோடி அளவில் வழங்கி மின்சார வாரியத்தை காப்பாற்றி உள்ளோம்.
மின்சார வாரியத்திற்காக 25 விழுக்காடு மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்கிறோம். 2006, 2011 மின் உற்பத்தி திட்டங்கள் தவிர கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், புதிய திட்டங்கள் கொண்டு வராமல், கூடுதலாக 12 ஆயிரம் கோடி வட்டியை கட்டியுள்ளனர்.
வாங்கப்பட்ட கடனுக்கு மட்டும் துறைவாரியாக கூடுதலாக நிறுவுதலன் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவுகளை முதல்வர் வழங்கினார். வரும் டிசம்பர் மாதம் 800 மெகாவாட் உற்பத்தியை தொடங்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது. விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் தமிழகத்தில் தான் விதிக்கப்படுகிறது.
மின் உற்பத்தியை 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஆதாரங்கள் டெண்டர் விடப்படும். தடையில்லாத மின்சாரம் அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழ்நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர்களது சொத்து மதிப்பு என்ன? 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன? ஐந்து ஆண்டுகளில் அவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று கவனத்தில் கொள்ளுங்கள்.
இந்த வருமானங்கள் எங்கிருந்து வந்தது? இத்தனை மடங்கு சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் கடந்த ஆட்சியில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதன்படி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிமன்றம் சென்று அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கலாம். வருமானம் எப்படி பல நூறு மடங்கு வருமானம் வந்தது என்று அங்கு சொல்லலாம். இதில், எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் மீனா லோகு, கல்விக்குழு தலைவர் மாலதி, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில் துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்கனவே கடன் சுமை இருந்தும், கடந்த 15 மாதங்களாக தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதற்கு காரணம், முதலமைச்சர் மட்டும்தான். இழுத்து மூட இருந்த மின்சார வாரியத்திற்கு 3500 கோடி மானியத்தை ஒப்புதல் அளித்து, கூடுதலாக 4000 கோடி அளவில் வழங்கி மின்சார வாரியத்தை காப்பாற்றி உள்ளோம்.
மின்சார வாரியத்திற்காக 25 விழுக்காடு மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்கிறோம். 2006, 2011 மின் உற்பத்தி திட்டங்கள் தவிர கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், புதிய திட்டங்கள் கொண்டு வராமல், கூடுதலாக 12 ஆயிரம் கோடி வட்டியை கட்டியுள்ளனர்.
வாங்கப்பட்ட கடனுக்கு மட்டும் துறைவாரியாக கூடுதலாக நிறுவுதலன் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவுகளை முதல்வர் வழங்கினார். வரும் டிசம்பர் மாதம் 800 மெகாவாட் உற்பத்தியை தொடங்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது. விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் தமிழகத்தில் தான் விதிக்கப்படுகிறது.
மின் உற்பத்தியை 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஆதாரங்கள் டெண்டர் விடப்படும். தடையில்லாத மின்சாரம் அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழ்நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர்களது சொத்து மதிப்பு என்ன? 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன? ஐந்து ஆண்டுகளில் அவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று கவனத்தில் கொள்ளுங்கள்.
இந்த வருமானங்கள் எங்கிருந்து வந்தது? இத்தனை மடங்கு சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் கடந்த ஆட்சியில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதன்படி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிமன்றம் சென்று அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கலாம். வருமானம் எப்படி பல நூறு மடங்கு வருமானம் வந்தது என்று அங்கு சொல்லலாம். இதில், எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் மீனா லோகு, கல்விக்குழு தலைவர் மாலதி, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.