கண் தான விழிப்புணர்வு வாரம்: கண் தானம் குறித்து திருப்பூரில் விழிப்புணர்வு மனித சங்கிலி..!

தேசிய கண்தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது.



திருப்பூர்: கண் தான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் செவிலியர் கல்லூரி மாணவ - மாணவிகள் மனித சங்கிலி இயக்கம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கண் தான விழிப்புணர்வு வாரமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கத்தில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும், அதன் மூலம் இறந்த பிறகும் நமது கண்கள் மூலம் பிறர் உலகை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதை வலியுறுத்தி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இதில், தனியார் செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு, கண் தானத்தை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...