கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் தோட்டத்துப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் சென்ற போலீசார் சொக்கனூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சொக்கனூர் தெற்கு தோட்டம் பகுதியில் கந்தசாமி என்பவரும் மேட்டுக்கடை தோட்டத்தில், நடராஜ் என்பவரும் கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக அரசு தடை செய்யப்பட்ட கள்ளை விற்பனை செய்த இருவரையும் கைது செய்த போலீசார், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இருவரிடம் இருந்தும் சுமார் 11 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் தோட்டத்துப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் சென்ற போலீசார் சொக்கனூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சொக்கனூர் தெற்கு தோட்டம் பகுதியில் கந்தசாமி என்பவரும் மேட்டுக்கடை தோட்டத்தில், நடராஜ் என்பவரும் கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக அரசு தடை செய்யப்பட்ட கள்ளை விற்பனை செய்த இருவரையும் கைது செய்த போலீசார், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இருவரிடம் இருந்தும் சுமார் 11 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.