கிணத்துக்கடவு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை - இருவர் கைது: 11 லிட்டர் கள் பறிமுதல்..!

கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் தோட்டத்துப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் சென்ற போலீசார் சொக்கனூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சொக்கனூர் தெற்கு தோட்டம் பகுதியில் கந்தசாமி என்பவரும் மேட்டுக்கடை தோட்டத்தில், நடராஜ் என்பவரும் கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழக அரசு தடை செய்யப்பட்ட கள்ளை விற்பனை செய்த இருவரையும் கைது செய்த போலீசார், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இருவரிடம் இருந்தும் சுமார் 11 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...