கோவை மாவட்ட போலீஸ் தொலைதொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், மாநகர ஆயுதப்படை பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங், சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ருக்மணி, காவல் பயிற்சிப்பள்ளி எஸ்.ஐ.,க்கள் - பாலு, பிரபு உள்பட 8 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.
கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பதக்கம் பெறும் போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் 100 பேர், இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 8 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
கோவை மாவட்ட போலீஸ் தொலைதொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், மாநகர ஆயுதப்படை பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங், சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ருக்மணி, காவல் பயிற்சிப்பள்ளி எஸ்.ஐ.,க்கள் பாலு, பிரபு மற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, ராமலஷ்மி, ஜெயஸ்ரீ ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பேரறிஞர் அண்ணா பதக்கத்துடன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பதக்கம் பெறும் போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் 100 பேர், இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 8 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
கோவை மாவட்ட போலீஸ் தொலைதொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், மாநகர ஆயுதப்படை பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங், சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ருக்மணி, காவல் பயிற்சிப்பள்ளி எஸ்.ஐ.,க்கள் பாலு, பிரபு மற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, ராமலஷ்மி, ஜெயஸ்ரீ ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பேரறிஞர் அண்ணா பதக்கத்துடன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.