பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - கோவை மாநகர், மாவட்ட போலீசார் 8 பேருக்கு அண்ணா பதக்கம்..!

கோவை மாவட்ட போலீஸ் தொலைதொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், மாநகர ஆயுதப்படை பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங், சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ருக்மணி, காவல் பயிற்சிப்பள்ளி எஸ்.ஐ.,க்கள் - பாலு, பிரபு உள்பட 8 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.


கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பதக்கம் பெறும் போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் 100 பேர், இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 8 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

கோவை மாவட்ட போலீஸ் தொலைதொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், மாநகர ஆயுதப்படை பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங், சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ருக்மணி, காவல் பயிற்சிப்பள்ளி எஸ்.ஐ.,க்கள் பாலு, பிரபு மற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, ராமலஷ்மி, ஜெயஸ்ரீ ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேரறிஞர் அண்ணா பதக்கத்துடன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...