குடும்ப பிரச்சினையில் உறவுக்கார பெண்கள் மிரட்டியதால், மன உளைச்சலுக்கு ஆளான +1 மாணவி அரசு பள்ளி கழிவறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தற்கொலைக்கு தூண்டிய 3 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: ஒப்பணக்கார வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி கழிவறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மரக்கடை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவியின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நடைபாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு மாணவி நடந்து சென்ற போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவுக்கார பெண்கள் 3 பேர் மாணவியை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மன உலைச்சலுக்கு ஆளான மாணவி கடைக்கு சென்று கொசு விரட்டும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி கழிவறைக்கு சென்று, தான் வாங்கி வைத்திருந்த கொசு விரட்டும் மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் செல்போன் மூலம் குழந்தைகள் உதவி மையத்துக்கு அழைத்து விஷம் குடித்த தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த குழந்தைகள் நல அமைப்பினர் பள்ளி கழிவறையில் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய என்.எச்.ரோடு சந்திரன் தெருவை சேர்ந்த சுமையா (22), சிபானா பர்வீன் (24) மற்றும் இவர்களின் தாய் ரஷீதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மரக்கடை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவியின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நடைபாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு மாணவி நடந்து சென்ற போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவுக்கார பெண்கள் 3 பேர் மாணவியை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மன உலைச்சலுக்கு ஆளான மாணவி கடைக்கு சென்று கொசு விரட்டும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி கழிவறைக்கு சென்று, தான் வாங்கி வைத்திருந்த கொசு விரட்டும் மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் செல்போன் மூலம் குழந்தைகள் உதவி மையத்துக்கு அழைத்து விஷம் குடித்த தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த குழந்தைகள் நல அமைப்பினர் பள்ளி கழிவறையில் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய என்.எச்.ரோடு சந்திரன் தெருவை சேர்ந்த சுமையா (22), சிபானா பர்வீன் (24) மற்றும் இவர்களின் தாய் ரஷீதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.