பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: கோவையில் அதிமுக சார்பில் நாளை மரியாதை - எஸ்.பி.வேலுமணி

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நாளை செப் 15 (வியாழக்கிழமை) கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோவை: பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா நாளை, செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அரசியல் காட்சிகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க நாளை (வியாழக்கிழமை) கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

அதன்படி, கட்சியின் தலைமை அறிவித்த பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும். மேலும், வருகிற 17-ந் தேதி கிணத்துக்கடவு தொகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் செ.தாமோதரன் எம்.எல்.ஏ., நடிகர் ரங்கநாதன், குன்னூர் விஜயலட்சுமி ஆகியோர் உரையாற்றுகின்றனர். 

18-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா, தோவாலா ரவி, முஜிபுர் ரகுமான் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். அதேநாளில் பொள்ளாச்சி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், சினிமா டைரக்டரும், அ.தி.மு.க. கலைப்பிரிவு இணை செயலாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன், கூடலூர் ராமமூர்த்தி, சக்தி பாலன் ஆகியோர் பேசுகிறார்கள். 

19-ந் தேதி வால்பாறை தொகுதியில் நடக்கும் கூட்டத்தில் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., நடிகர் வையாபுரி, தென்றல் விஜய் ஆகியோரும், 21-ந் தேதி சூலூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், வி.பி. கந்தசாமி எம்.எல்.ஏ., சந்திரகாசன், நாகராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்பார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...