பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.20,000 பணத்தை, 12 சதவிகித வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயும் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: அரசூர் அருகே ஏ.டி.எம்-ல் பணம் வராமல் வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசூர் அருகேயுள்ள கொல்லுபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் மில் தொழிலாளியான இவர், சின்னியம்பாளையம் இந்தியன் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கருமத்தம்பட்டியில் உள்ள 'டிஎம்பி' வங்கி ஏ.டி.எம்-ல் அவசர தேவைக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி, 10,000 ரூபாய் எடுப்பதற்கு முயன்றுள்ளார். முதல் முறை முயன்ற போது, ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இரண்டாவது முறையாக, அதே தொகையை எடுக்க முயன்ற போது, தற்காலிகமாக செயலில் இல்லை என்று காட்டியுள்ளது.
இந்நிலையில் மற்றொரு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்ற போது, அவரது வங்கி கணக்கில் பணம் இருப்பு இல்லை என வந்துள்ளது. அதாவது, ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து பணம் வராமலேயே, ரூ.20,000 எடுத்து விட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், சம்பந்தப்பட்ட வங்கிக்கு பலமுறை சென்று கேட்ட போதும், உரிய பதில் அளிக்கவில்லை என்றும், பணத்தை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஆறுமுகம், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், இந்தியன் வங்கி சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டது.
எனவே பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு 20,000 ரூபாயை, 12 சதவிகித வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அரசூர் அருகேயுள்ள கொல்லுபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் மில் தொழிலாளியான இவர், சின்னியம்பாளையம் இந்தியன் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கருமத்தம்பட்டியில் உள்ள 'டிஎம்பி' வங்கி ஏ.டி.எம்-ல் அவசர தேவைக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி, 10,000 ரூபாய் எடுப்பதற்கு முயன்றுள்ளார். முதல் முறை முயன்ற போது, ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இரண்டாவது முறையாக, அதே தொகையை எடுக்க முயன்ற போது, தற்காலிகமாக செயலில் இல்லை என்று காட்டியுள்ளது.
இந்நிலையில் மற்றொரு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்ற போது, அவரது வங்கி கணக்கில் பணம் இருப்பு இல்லை என வந்துள்ளது. அதாவது, ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து பணம் வராமலேயே, ரூ.20,000 எடுத்து விட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், சம்பந்தப்பட்ட வங்கிக்கு பலமுறை சென்று கேட்ட போதும், உரிய பதில் அளிக்கவில்லை என்றும், பணத்தை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஆறுமுகம், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், இந்தியன் வங்கி சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டது.
எனவே பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு 20,000 ரூபாயை, 12 சதவிகித வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.