உப்பிலிபாளையத்தில் பரபரப்பு: தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் - போலீசார் விசாரணை..!

உப்பிலிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தேவி என்ற பெண் அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: உப்பிலிபாளையம் அருகே தனியார் குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர்கள் மூர்த்தி - தேவி(27) தம்பதி. கணவர் மூர்த்தி இறந்த நிலையில், தேவி அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தேவி தனது அக்கவான சத்யா (33) உடன் நேற்றைய தினம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.

அப்போது மாலை 5.30 மணியளவில் பணியில் இருந்த தேவி மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்யா அப்பகுதி முழுவதும் அவரை தேடியுள்ளார். கிடைக்காத நிலையில், 7.30 மணியளவில் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்த போது தேவி, தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தேவியின் உடலை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண், தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...