அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை - 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு..!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.



கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில், இன்று காலை முதல் கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, கே.சி.பி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீடு, ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வீடு, சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் நிறுவனம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக அளவில் அதிமுக தொண்டர்கள் குவிய துவங்கியதால், அனுமதி மறுத்த காவல் துறையினருக்கும் அங்கு திரண்டிருந்த அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இதனையடுத்து சூழலை கட்டுப்படுத்தும் விதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் என 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், எஸ்.பி வேலுமணி வீட்டில் 8 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.



இதேபோல், எஸ்.பி. வேலுமணியின் நெருங்கி நண்பர் மற்றும் நமது அம்மா நாளிதழின் பதிப்பாளருமான வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் நடைபெற்ற சோதனை முடிவுற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்றனர்.



சோதனை முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வீட்டுக்கு முன் நின்றிருந்த அவரது ஆதரவாளர்களை சந்தித்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே, சந்திரசேகர் இல்லத்திற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான சி.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...