அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை - 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு..!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.



கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில், இன்று காலை முதல் கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, கே.சி.பி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீடு, ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வீடு, சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் நிறுவனம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக அளவில் அதிமுக தொண்டர்கள் குவிய துவங்கியதால், அனுமதி மறுத்த காவல் துறையினருக்கும் அங்கு திரண்டிருந்த அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இதனையடுத்து சூழலை கட்டுப்படுத்தும் விதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் என 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், எஸ்.பி வேலுமணி வீட்டில் 8 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.



இதேபோல், எஸ்.பி. வேலுமணியின் நெருங்கி நண்பர் மற்றும் நமது அம்மா நாளிதழின் பதிப்பாளருமான வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் நடைபெற்ற சோதனை முடிவுற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்றனர்.



சோதனை முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வீட்டுக்கு முன் நின்றிருந்த அவரது ஆதரவாளர்களை சந்தித்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே, சந்திரசேகர் இல்லத்திற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான சி.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...