கல்லூரி மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்த கூரியர் நிறுவன ஊழியர் கைது..!

பீளமேடு அருகே கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்து துன்புறுத்திய கூரியர் டெலிவரி ஊழியரை கைது செய்த போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: பீளமேடு அருகே கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்து துன்புறுத்திய கூரியர் டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காந்திபுரம் நான்காவது வீதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (27). கூரியர் நிறுவனத்தில் 'டெலிவரி' செய்யும் ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த 10ஆம் தேதி பகல், 12:30 மணிக்கு பீளமேடு எல்லைத்தோட்டம் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியில் வந்த கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கேலி செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, மாணவி தனது பெற்றோர் உதவியுடன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிறப்பு எஸ்.ஐ. முருகேசன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தரவின் படி சுரேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...