பீளமேடு அருகே கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்து துன்புறுத்திய கூரியர் டெலிவரி ஊழியரை கைது செய்த போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: பீளமேடு அருகே கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்து துன்புறுத்திய கூரியர் டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காந்திபுரம் நான்காவது வீதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (27). கூரியர் நிறுவனத்தில் 'டெலிவரி' செய்யும் ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த 10ஆம் தேதி பகல், 12:30 மணிக்கு பீளமேடு எல்லைத்தோட்டம் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியில் வந்த கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கேலி செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, மாணவி தனது பெற்றோர் உதவியுடன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிறப்பு எஸ்.ஐ. முருகேசன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தரவின் படி சுரேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்திபுரம் நான்காவது வீதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (27). கூரியர் நிறுவனத்தில் 'டெலிவரி' செய்யும் ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த 10ஆம் தேதி பகல், 12:30 மணிக்கு பீளமேடு எல்லைத்தோட்டம் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியில் வந்த கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கேலி செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, மாணவி தனது பெற்றோர் உதவியுடன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிறப்பு எஸ்.ஐ. முருகேசன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தரவின் படி சுரேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.