வடவள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.
கோவை: வடவள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்துமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து, இந்துமதி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளார்.
விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பாண்டியன் (31) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்துமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து, இந்துமதி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளார்.
விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பாண்டியன் (31) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.