கோவை வடவள்ளி அருகே வீடு புகுந்து கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை பறிப்பு - கொள்ளையனை கைது செய்த போலீசார்..!

வடவள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.


கோவை: வடவள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்துமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து, இந்துமதி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளார்.

விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பாண்டியன் (31) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...