விழிப்புணர்வு பேரணியில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
கோவை: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் செப்டம்பர் 10ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று மனம் அமைப்பு மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, தற்கொலையை தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.
இன்று காலை, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியானது ரயில் நிலையம் வழியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்து நீதிமன்றம் வழியாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.