கோவையில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கம்மல் பறிப்பு; இருவருக்கு போலீசார் வலைவீச்சு..!

சுங்கம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காதணியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற நிலையில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: சுங்கம் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியின் காதணியை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுங்கம் அடுத்த சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவரது மனைவி ஆரோக்கியமேரி (60), சர்க்கரை நோய் உள்ளதால், அவர் தினமும் திருச்சி சாலையில் சுங்கம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மாலை அவர் வழக்கம்போல் சிவராம் நகர் அருகே நடைபயிற்சி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், ஆரோக்கியமேரி காதில் அணிந்திருந்த ஒரு சவரன் காதணியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் காதணியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...