சுங்கம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காதணியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற நிலையில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: சுங்கம் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியின் காதணியை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சுங்கம் அடுத்த சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவரது மனைவி ஆரோக்கியமேரி (60), சர்க்கரை நோய் உள்ளதால், அவர் தினமும் திருச்சி சாலையில் சுங்கம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை அவர் வழக்கம்போல் சிவராம் நகர் அருகே நடைபயிற்சி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், ஆரோக்கியமேரி காதில் அணிந்திருந்த ஒரு சவரன் காதணியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் காதணியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சுங்கம் அடுத்த சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவரது மனைவி ஆரோக்கியமேரி (60), சர்க்கரை நோய் உள்ளதால், அவர் தினமும் திருச்சி சாலையில் சுங்கம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை அவர் வழக்கம்போல் சிவராம் நகர் அருகே நடைபயிற்சி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், ஆரோக்கியமேரி காதில் அணிந்திருந்த ஒரு சவரன் காதணியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் காதணியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.