தாய் தந்தை இல்லாததால் சொத்தை அபகரிக்க உறவினர்கள் கொலை மிரட்டல்..! - 14 வயது சிறுமி பரபரப்பு புகார்

பொள்ளாச்சியில் பாட்டியுடன் வசிக்கும் சிறுமிக்கு, தந்தையின் அண்ணன் குடும்பத்தினர் சொத்தை அபகரிக்கும் நோக்கில் கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சிறுமி மனு அளித்துள்ளார்.



கோவை: கிணத்துக்கடவு அருகே தாய் தந்தை இல்லாததால், சொத்தை அபகரிப்பதற்காக உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக 14 வயது சிறுமி ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமியின், தாய் - தந்தை இருவரும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி பொள்ளாச்சியில் உள்ள அவரது பாட்டியின் ஆதரவில் வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தனது தாய், தந்தையின் சொத்தை அபகரிக்க தனது பெரியப்பா, பெரியம்மா அவர்களது மகன் ஆகியோர் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதுடன், தனக்கும் பாட்டிக்கும் கொலை மிரட்டல் விடுவதாக கூறி புகார் மனு அளித்தார்.



மேலும், அவர் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக பொய் புகார் அளித்ததாகவும், ஆனால் விசாரணையில் தன் மீது எவ்வித தவறுமில்லை என காவல்துறையினரே கூறி விட்டனர் என்பதையும் புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சொத்தை அபகரிக்க முயலும் உறவினர்களிடம் இருந்து தனக்கும் தனது பாட்டியின் உயிருக்கும் உடமைகளுக்கு பாதுகாப்பு நல்க வேண்டுமென அச்சிறுமி கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...