15 ஆண்டுகளாக இருப்பிடம் இல்லை: வீட்டு மனை பட்டா வேண்டி 300க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்; எம்.பி பி.ஆர். நடராஜன் ஆதரவு..!

கடந்த 2007 ஆம் ஆண்டு கோவை வின்சன்ட் சாலையில் இருந்த ஹவுசிங் யூனிட் கட்டிடம் பழுதானதால், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட 350 குடும்பங்களுக்கு இன்று வரை மாற்று வீட்டுமனை ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.



கோவை: கோவை வின்சென்ட் ரோடு பகுதியை சேர்ந்த மக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை வின்சென்ட் ரோடு பகுதியில் 350 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு அவர்கள் குடியிருந்து வந்த ஹவுசிங் யூனிட் கட்டிடம் பூமிக்குள் புதைந்து பெரும் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அப்போதைய திமுக அரசு 350 குடும்பங்களை சேர்ந்த மக்களையும் ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி அந்த கட்டிடடத்தை இடித்து அப்புறப்படுத்தியது. அதே நேரத்தில் அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி தராமல் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக இருப்பிடம் இன்றியும் வாழ்வாதாரம் இழந்தும் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இன்று 300க்கும் மேற்பட்ட மக்கள், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை எம்.பி. நடராஜன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து பேசிய எம்.பி. நடராஜன், 15 வருடங்களாக வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உடனடியாக மாநில அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மாற்று வீடு ஒதுக்கி உதவிட வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...