கோவை சிங்காநல்லூர் அருகே பரபரப்பு: மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மர்மமான முறையில் கொலை - போலீசார் விசாரணை…!

மூதாட்டியின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில், நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சிங்காநல்லூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 77 வயது மூதாட்டி மர்மமான முறையில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மயிலாத்தாள்(77). இவரது கணவர் ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதால், மகனும் 20 ஆண்டுகளுக்கு முன் மாயமானதாக கூறப்படுகிறது.

வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கடந்த 2 நாட்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, இதுகுறித்து அவரது சகோதரி கண்ணம்மாளுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கண்ணம்மாள் வந்து வீட்டைத் திறந்து பார்த்த போது மூதாட்டியின் கைகள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு, கழுத்து கிரைண்டர் வயரால் இறுக்கப்பட்டு கொலை செய்யபட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...