மூதாட்டியின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில், நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: சிங்காநல்லூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 77 வயது மூதாட்டி மர்மமான முறையில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மயிலாத்தாள்(77). இவரது கணவர் ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதால், மகனும் 20 ஆண்டுகளுக்கு முன் மாயமானதாக கூறப்படுகிறது.
வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கடந்த 2 நாட்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, இதுகுறித்து அவரது சகோதரி கண்ணம்மாளுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கண்ணம்மாள் வந்து வீட்டைத் திறந்து பார்த்த போது மூதாட்டியின் கைகள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு, கழுத்து கிரைண்டர் வயரால் இறுக்கப்பட்டு கொலை செய்யபட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மயிலாத்தாள்(77). இவரது கணவர் ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதால், மகனும் 20 ஆண்டுகளுக்கு முன் மாயமானதாக கூறப்படுகிறது.
வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கடந்த 2 நாட்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, இதுகுறித்து அவரது சகோதரி கண்ணம்மாளுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கண்ணம்மாள் வந்து வீட்டைத் திறந்து பார்த்த போது மூதாட்டியின் கைகள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு, கழுத்து கிரைண்டர் வயரால் இறுக்கப்பட்டு கொலை செய்யபட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.