உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் ஐந்து இடத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு ஏறு தழுத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு, பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்ட கான்கிரீட் பாலம் சாயத் துவங்கி உள்ளது.
கோவை: கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதில், மூன்று இடங்களில் ஏறு தளம் இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளன.

உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் ஐந்து இடத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு ஏறு தழுத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 3000-க்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகளை இணைத்து சாரம் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்டுள்ளது.200 அடி நீளத்திற்கும் 100 அடி அகலத்திற்கும் போடப்பட்ட கான்கிரீட் பாலம் சாயத் துவங்கி உள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் பணியை நிறுத்தினர். பாலம் சரியப் போவதை கண்டு மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம், விபத்தை முன்கூட்டியே அறிந்ததால்,எவ்வித பெரும் விபத்துகளின்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்தப்பினர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், சாரத்தில் இருந்த இணைப்பு கிளாம்புகள் சில இடங்களில் துண்டாகிவிட்டதாகவும்இதை சரி செய்து சாரத்தை சீரமைக்கும் பணி நடக்கும் எனவும்கான்கிரீட் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கான்கிரீட் பாலம் விழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
திடீரென சாரம் சரிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது.

உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் ஐந்து இடத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு ஏறு தழுத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 3000-க்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகளை இணைத்து சாரம் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்டுள்ளது.200 அடி நீளத்திற்கும் 100 அடி அகலத்திற்கும் போடப்பட்ட கான்கிரீட் பாலம் சாயத் துவங்கி உள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் பணியை நிறுத்தினர். பாலம் சரியப் போவதை கண்டு மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம், விபத்தை முன்கூட்டியே அறிந்ததால்,எவ்வித பெரும் விபத்துகளின்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்தப்பினர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், சாரத்தில் இருந்த இணைப்பு கிளாம்புகள் சில இடங்களில் துண்டாகிவிட்டதாகவும்இதை சரி செய்து சாரத்தை சீரமைக்கும் பணி நடக்கும் எனவும்கான்கிரீட் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கான்கிரீட் பாலம் விழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
திடீரென சாரம் சரிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது.