குன்னூர் அருகே சாலையோர கடையின் மீது கார் மோதி பயங்கர விபத்து - இளைஞர் உயிரிழந்த சோகம்..!

ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு சென்றவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: குன்னூர் அருகே ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு சென்றவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையின் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று 8ஆம் தேதி நாடு முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை ஓட்டி, நீண்ட விடுமுறையை நீலகிரியில் செலவிட ஏராளமானோர் வந்திருந்தனர்.

அதன்படி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று ஸ்கார்பியோ காரில் வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர் அவர்களது காரை சன்ஜித் (18) என்பவர் ஓட்டியுள்ளார்.



வாகனம் காட்டேரி அடுத்த கே.எம்.எப் பகுதியில் செல்லும் போது அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர கடையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.



இதில் வாகனத்தில் பயணித்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.



இதனையடுத்து உடனடியாக அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பலத்த காயமடைந்த வாகனத்தை ஓட்டிய சன்ஜித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதுகுறித்து, குன்னூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓணம் பண்டிகைக்காக நீலகிரி வந்த வாலிபர் விபத்தில் பலியானது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலைப்பகுதியில் வேகமாகவோ, வளைவுகளில் முந்தி செல்லவோ கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டும், இது போன்று அதிவேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துள்ளாவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

குறிப்பாக, வெளி ஊர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதைகளின் தன்மை சரிவர தெரியாததால், விபத்துகளில் சிக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...