4 வது முறையாக நிரம்பவுள்ள சிறுவாணி அணை - அடுத்த 6 மாதங்களுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லை: அதிகாரிகள் தகவல்

வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை நோக்கி நகர்ந்து வரும் அணையின் நீர்மட்டம் தற்போது 44.12 அடியாக உள்ளது. தொடர்ந்து, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்து வருவதனால் இந்த வாரத்திலேயே அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கோவை: கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், நான்காவது முறையாக சிறுவானி அணை முழு கொள்ளவை ஏட்டவுள்ளது. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு, கோவை மாநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது சிறுவாணி அணை. உலகின் சுவை மிகுந்த இரண்டாவது நீர் சிறுவாணி என்ற தன்னற்ற இடத்தை கொண்ட சிறுவாணி நீர், கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவே திகழ்கின்றது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 22 வார்டுகளுக்கு சிறுவாணி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், 7 டவுன் பஞ்சாயித்துகள், 10 கிராம ஊராட்சிகளுக்கும் சிறுவாணி அணையே முக்கிய நீர் ஆதாரமாகும்.

சிறுவானி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், அடிவாரத்தில் அடை மழை பொழிந்து வருவதனால் அணை நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. எனவே, சிறுவாணி அணையின் வரையறுக்கப்பட்ட முழு கொள்ளளவான 45 அடியை இந்த வருடத்தில் நான்காவது முறையாக எட்டயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.



வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை நோக்கி நகர்ந்து வரும் அணையின் நீர்மட்டம் தற்போது 44.12 அடியாக உள்ளது. தொடர்ந்து, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்து வருவதனால் இந்த வாரத்திலேயே அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவாணி அடிவாரத்தில் மழை அளவு 31 மி மீ ஆகவும், சிறுவானி அணைக்கட்டு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு 102 மி மீ ஆகவும் பதிவாகி உள்ளது.



தொடர் மழைபொழிவு உள்ளதால், முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், சிறுவானி அணை மீண்டும் நிரம்பினால் இந்த வருடத்தில் நான்காவது முறையாக நிரம்பியதாக கணக்கிடப்படும், என்றனர்.

மேலும், இந்த நிலை நீடித்தால், அடுத்த ஆறு மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...