வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை நோக்கி நகர்ந்து வரும் அணையின் நீர்மட்டம் தற்போது 44.12 அடியாக உள்ளது. தொடர்ந்து, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்து வருவதனால் இந்த வாரத்திலேயே அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை: கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், நான்காவது முறையாக சிறுவானி அணை முழு கொள்ளவை ஏட்டவுள்ளது. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு, கோவை மாநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது சிறுவாணி அணை. உலகின் சுவை மிகுந்த இரண்டாவது நீர் சிறுவாணி என்ற தன்னற்ற இடத்தை கொண்ட சிறுவாணி நீர், கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவே திகழ்கின்றது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 22 வார்டுகளுக்கு சிறுவாணி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், 7 டவுன் பஞ்சாயித்துகள், 10 கிராம ஊராட்சிகளுக்கும் சிறுவாணி அணையே முக்கிய நீர் ஆதாரமாகும்.
சிறுவானி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், அடிவாரத்தில் அடை மழை பொழிந்து வருவதனால் அணை நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. எனவே, சிறுவாணி அணையின் வரையறுக்கப்பட்ட முழு கொள்ளளவான 45 அடியை இந்த வருடத்தில் நான்காவது முறையாக எட்டயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை நோக்கி நகர்ந்து வரும் அணையின் நீர்மட்டம் தற்போது 44.12 அடியாக உள்ளது. தொடர்ந்து, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்து வருவதனால் இந்த வாரத்திலேயே அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவாணி அடிவாரத்தில் மழை அளவு 31 மி மீ ஆகவும், சிறுவானி அணைக்கட்டு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு 102 மி மீ ஆகவும் பதிவாகி உள்ளது.
தொடர் மழைபொழிவு உள்ளதால், முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், சிறுவானி அணை மீண்டும் நிரம்பினால் இந்த வருடத்தில் நான்காவது முறையாக நிரம்பியதாக கணக்கிடப்படும், என்றனர்.
மேலும், இந்த நிலை நீடித்தால், அடுத்த ஆறு மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.