'சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல..?'- கோவைக்கு வந்துள்ள அமைச்சர் பிடிஆர் ஐ வரவேற்று திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு மற்றும் கோவை மாநகராட்சியின் எச்சரிக்கையை மீறி கோவையில் திமுகவினர் மீண்டும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளது, மக்கள் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று திமுகவினரால் ஓட்டபட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவில், தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அதில் "சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல...?" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டரானது தற்பொழுது மக்களை திரும்பி பார்க்க செய்துள்ளது. இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு மற்றும் கோவை மாநகராட்சியின் எச்சரிக்கையை மீறி கோவையில் திமுகவினர் மீண்டும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளது, மக்கள் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் இன்று கோவைக்கு வந்துள்ளனர்.



இந்த நிலையில், கோவைக்கு வருகை தந்துள்ள தமிழக நிதி அமைச்சரை வரவேற்கும் விதமாக பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில், கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில் "சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல...?" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் முனுமுனுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில், ஆளும் கட்சியினரே நீதிமன்ற உத்தரவை மற்றும் மாநகராட்சி ஆணையரின் உத்தரவை மீறி போஸ்டர்கள் ஓட்டுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால் திமுக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இந்த போக்கை கோவை திமுக பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...