கோவையில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு மலையாளி மக்கள் உற்சாக கொண்டாட்டம்

இன்றைய தினம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மலையாளி மக்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். அத்தப்பூ கோலமிட்டு கோவில் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.



கோவை: கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகைஇன்று உலகம் முழுவதும் உள்ள மலையாளம் பேசும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி ஹஸ்தம் நட்சத்திரம் அன்று தொடங்கி தொடர்ந்து இன்று (செப் 8) திருவோண நட்சத்திரம் வரை 10-நாட்கள் இந்த பண்டிகை நடைபெற்று வருகிறது.



ஓணம் பண்டிகையின் போது, கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி வீடுகளை பார்வையிட வருகை தருவதாக நம்பப்படுகிறது.இதனால், இந்த பத்து நாட்களும் மலையாளி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் அத்தப்பூ கோலமிட்டு, அறுசுவை உணவுகளை படைத்து

மகாபலியை வழிபடுவதும் வழக்கம்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் ஏராளமான மலையாள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம்.



இன்றைய தினம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மலையாளி மக்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அத்தப்பூ கோலமிட்டு கோவில் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்கள் அவர்களது இல்லங்களில் அத்தப்ப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை பாடல்கள் பாடி, ஓணம் சதியா எனப்படும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என பலவகை சுவையுடன் கூடிய உணவை சமைத்து உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...