கோவையில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு மலையாளி மக்கள் உற்சாக கொண்டாட்டம்

இன்றைய தினம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மலையாளி மக்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். அத்தப்பூ கோலமிட்டு கோவில் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.



கோவை: கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகைஇன்று உலகம் முழுவதும் உள்ள மலையாளம் பேசும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி ஹஸ்தம் நட்சத்திரம் அன்று தொடங்கி தொடர்ந்து இன்று (செப் 8) திருவோண நட்சத்திரம் வரை 10-நாட்கள் இந்த பண்டிகை நடைபெற்று வருகிறது.



ஓணம் பண்டிகையின் போது, கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி வீடுகளை பார்வையிட வருகை தருவதாக நம்பப்படுகிறது.இதனால், இந்த பத்து நாட்களும் மலையாளி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் அத்தப்பூ கோலமிட்டு, அறுசுவை உணவுகளை படைத்து

மகாபலியை வழிபடுவதும் வழக்கம்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் ஏராளமான மலையாள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம்.



இன்றைய தினம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மலையாளி மக்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அத்தப்பூ கோலமிட்டு கோவில் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்கள் அவர்களது இல்லங்களில் அத்தப்ப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை பாடல்கள் பாடி, ஓணம் சதியா எனப்படும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என பலவகை சுவையுடன் கூடிய உணவை சமைத்து உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...