உலக முதலுதவி தினத்தையொட்டி வரும் 10-ஆம் தேதி கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் 5000 மாணவ - மாணவிகளுக்கு முதலுதவி செய்முறை பயிற்சி அளிக்கும் உலக சாதனை முயற்சி நடைபெற உள்ளது.
கோவை: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு வரும் 10-ம் தேதி உலக சாதனை முயற்சியாக 5000 மாண்வர்களுக்கு முதலுதவி செய்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.
முதலுதவி செய்து பல உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று, உலக முதலுதவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டின் முதலுதவி தினம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக வரும் 10-ம் தேதி 5000 பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 10-ம் தேதி அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 1,000 பேர், அண்ணா பல்கலைக்கழக மாணவ - மாணவிகள் 1,000 பேர், குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 200 பேர், குமரகுரு பள்ளி மாணவ - மாணவிகள் 1,000 பேர், குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 2,000 பேர் என 5000க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு வருவதற்கான அடிப்படை முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யவும் தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முதலுதவி செய்து பல உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று, உலக முதலுதவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டின் முதலுதவி தினம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக வரும் 10-ம் தேதி 5000 பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 10-ம் தேதி அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 1,000 பேர், அண்ணா பல்கலைக்கழக மாணவ - மாணவிகள் 1,000 பேர், குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 200 பேர், குமரகுரு பள்ளி மாணவ - மாணவிகள் 1,000 பேர், குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 2,000 பேர் என 5000க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு வருவதற்கான அடிப்படை முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யவும் தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.