வால்பாறை நடுமலை ஆற்றில் 108 விநாயகர் சிலைகள் கரைப்பு

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைக்கப்பட்ட 12 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை உட்பட வால்பாறை பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 108 சிலைகளையும் வாகனத்தில் ஏற்றி வால்பாறை பிரதான சாலையான காந்தி சிலை, வாழைத்தோட்ட வழியாக சென்று மீண்டும் சுப்பிரமணி கோவில் வீதியில் வந்து நடுமலை ஆற்றில் கிரேன் மூலம் சிலைகள் ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 108 விநாயகர் சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை அடுத்து கொரோனா கட்டுப்பாடு நீடித்ததால் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு கட்டுப்பாடுடன் கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அரசு கட்டுபாடை நீக்கி விநாயகர் சதுர்த்தி விழாவை மிக விமர்சையாக மக்கள் கொண்டாடினர். வால்பாறை பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் ஏ எஸ் டி சேகர் மாவட்ட துணை தலைவர் தலைமையில் மாநிலச் செயலாளர் சி எம் அண்ணாதுரை முன்னிலையில் வால்பாறையில் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் இருந்து 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.



தலைமை சிலையாக வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 12 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அதன்படி, வால்பாறை பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 108 சிலைகளையும் வாகனத்தில் ஏற்றி வால்பாறை பிரதான சாலையில் காந்தி சிலை, வாழைத்தோட்ட வழியாக சென்று மீண்டும் சுப்பிரமணி கோவில் வீதியில் வந்து நடுமலை ஆற்றில் கிரேன் மூலம் சிலைகள் ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும், மக்கள் சிலை கரைப்பு நிகழ்ச்சியை விமர்சையாக கொண்டாடினர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் என சுமார் 270 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...