விநாயகர் சிலை விஜர்சனம்: பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த கோவை மாநகர்!!

இன்று முத்தண்ணன் குளத்தில் 286 சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் விஜர்சனத்தில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க, பாதுகாப்பு பணியில் சுமார் 1900 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கடந்த 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாநகரில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, அனுமன் சேனா, இந்து பாரத் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

அதன்படி, புறநகரில் 1556 சிலைகள் என மொத்தம் பொது இடங்களில் 538 சிலைகள் வைக்கப்பட்டன. மேலும், பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

வழிபாட்டுக்கு பின்னர் விநாயகர் சிலைகள் நேற்று முன் தினம் மேள தாளம் முழங்க நகர்வலம் வந்து கோவையில் உள்ள அனுமதிக்கப்பட்ட குளங்களில் கரைக்கப்பட்டன. குறிப்பாக, குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளம், குனியமுத்தூர் குளம், போத்தனூர் குளம் மற்றும் புறநகரில் உள்ள குளங்களில் விநாயகர் விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று முத்தண்ணன் குளத்தில் மட்டும் விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முத்தண்ணன்

குளத்தில் 286 சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லாரிகள், டெம்போக்கள், ஆட்டோக்களில் குளக்கரைக்கு கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் கரைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

களத்தில் அதிவிரைவுப்படை..! பாதுகாப்பு வளையத்திற்குள் கோவை.

இன்று நடைபெறவுள்ள விநாயகர் ஊர்வலம், விஜர்சனத்தில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரம் முழுவதும் சுமார் 1900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிவிரைவு படையை சேர்ந்த 360 பேர் அடங்கிய 3 குழுக்களும் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால், ஒட்டுமொத்த கோவை மாநகரமும் காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...