வால்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்.

குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள உணவுகள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் சம்பந்தப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறையில் தமிழ்நாடு ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டது.



ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வால்பாறை பகுதியில் உள்ள நடுமலை, கராஜ் நகர், காந்தி நகர் போன்ற பகுதியில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகுறைபாடுகள் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



குழந்தைகளுக்கு காய்கறி உணவு, சிறு தானிய உணவுகள் போன்றவற்றை தரவேண்டும். மேலும் 2 வயது வரை குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் கலந்த உணவுகளை கொடுக்க வேண்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், நகர மன்ற துணை தலைவர் செந்தில், குழந்தைகள் மேற்பார்வையாளர் நாகஜோதி, ஊழியர்கள் டென்சிங், ஜெயராம், கீதா ராணி, இமக்லெட், காலிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...