குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள உணவுகள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் சம்பந்தப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கோவை: வால்பாறையில் தமிழ்நாடு ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வால்பாறை பகுதியில் உள்ள நடுமலை, கராஜ் நகர், காந்தி நகர் போன்ற பகுதியில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகுறைபாடுகள் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு காய்கறி உணவு, சிறு தானிய உணவுகள் போன்றவற்றை தரவேண்டும். மேலும் 2 வயது வரை குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் கலந்த உணவுகளை கொடுக்க வேண்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், நகர மன்ற துணை தலைவர் செந்தில், குழந்தைகள் மேற்பார்வையாளர் நாகஜோதி, ஊழியர்கள் டென்சிங், ஜெயராம், கீதா ராணி, இமக்லெட், காலிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வால்பாறை பகுதியில் உள்ள நடுமலை, கராஜ் நகர், காந்தி நகர் போன்ற பகுதியில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகுறைபாடுகள் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு காய்கறி உணவு, சிறு தானிய உணவுகள் போன்றவற்றை தரவேண்டும். மேலும் 2 வயது வரை குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் கலந்த உணவுகளை கொடுக்க வேண்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், நகர மன்ற துணை தலைவர் செந்தில், குழந்தைகள் மேற்பார்வையாளர் நாகஜோதி, ஊழியர்கள் டென்சிங், ஜெயராம், கீதா ராணி, இமக்லெட், காலிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.