கோவையில் "கேப்டன்" பட புரொமோஷன்: விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும் - நடிகர் ஆர்யா.

வரும் 8 ஆம் தேதி ஆர்யா நடிப்பில் வெளியாகும் "கேப்டன்" திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் தற்போது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும், என கோவையில் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் என்ற திரைப்படம் வரும் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான, புரோமோஷன் பணிகளில் தற்போது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, நடிகர் ஆர்யா கோவையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆர்யா, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ள கேப்டன் திரைப்படத்தின் கரு, ராணுவத்தை கதைக்களமாக கொண்டுவித்தியாசமானதாக அமைக்கப்பட்டுள்ளது.கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களை போல இருக்கும்.



தமிழ்நாடு அரசு ராஜா ராணி திரைப்படத்திற்கு விருது கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நல்ல கதை கொண்ட படங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு, நடிகர் சங்கம் மூலமாக கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும்.



இந்திய ராணுவ வீரர்களுக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை. ஆனால், நடிகர்களுக்கு கிடைக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய ராணுவ வீரர்கள் வாழ்க்கையை கொடுக்கிறார்கள். எதையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை, என தெரிவித்தார்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...