பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருப்பூருக்கு புறப்பட்ட எல்.முருகன், வழியில் அரசூர் பொன்னர் சங்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவை: கோவை மாவட்டம் தென்னம்பாளையம் அடுத்த அரசூரில் உள்ள பொன்னர் - சங்கர் கோவிலில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

அரசூரில் உள்ள பொன்னர் -சங்கர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன்இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார்.

இதனிடையே திருப்பூர் செல்லும் வழியில் அரசூரில் உள்ள பொன்னர் - சங்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு ஊர் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது

அரசூரில் உள்ள பொன்னர் -சங்கர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன்இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார்.
இதனிடையே திருப்பூர் செல்லும் வழியில் அரசூரில் உள்ள பொன்னர் - சங்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு ஊர் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது