ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்களின் விலை மேலும் உயரும் - பூ வியாபாரிகள் கருத்து.

வரும் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரளாவுக்கு அதிகளவிலான பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஓணம் பண்டிகை நெருங்குவதால் இனி பூக்கள் விலை மேலும் உயரும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாக ஓணம் பண்டிகைக்கு கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான பூக்கள்(மல்லி, முல்லை, கலர் பூக்கள்) ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள்என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும் முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மல்லி, முல்லை பூக்களுக்கு வரும் 8ஆம் தேதி வரை நல்ல விலை இருக்கும். முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும் போது இன்னும் விலை அதிகரிக்கும்.

கலர் பூக்களை பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படும். இது வருடத்திலேயே மிக பெரிய கலர் பூக்கள் வியாபாரம். 8ம் தேதி வரை விலை உயர்வு இருக்கும்.

கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும். ரோஜா, அரளி ஆகியவை சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும்.மல்லி முல்லை ஆகியவை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்கள் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளாவில் மழை இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய பூக்கள் விலை நிலவரம்:

செண்டுமல்லி - ரூ.60

வெள்ளமல்லி - ரூ.240

வாடாமல்லி - ரூ.120

கலர் செவ்வந்தி - ரூ.320

அரளி -ரூ.200

ரோஜா - ரூ.240

மல்லிகை - ரூ.1,200

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...