வரும் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரளாவுக்கு அதிகளவிலான பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: ஓணம் பண்டிகை நெருங்குவதால் இனி பூக்கள் விலை மேலும் உயரும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பொதுவாக ஓணம் பண்டிகைக்கு கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான பூக்கள்(மல்லி, முல்லை, கலர் பூக்கள்) ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள்என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும் முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மல்லி, முல்லை பூக்களுக்கு வரும் 8ஆம் தேதி வரை நல்ல விலை இருக்கும். முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும் போது இன்னும் விலை அதிகரிக்கும்.
கலர் பூக்களை பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படும். இது வருடத்திலேயே மிக பெரிய கலர் பூக்கள் வியாபாரம். 8ம் தேதி வரை விலை உயர்வு இருக்கும்.
கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும். ரோஜா, அரளி ஆகியவை சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும்.மல்லி முல்லை ஆகியவை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்கள் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளாவில் மழை இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்றைய பூக்கள் விலை நிலவரம்:
செண்டுமல்லி - ரூ.60
வெள்ளமல்லி - ரூ.240
வாடாமல்லி - ரூ.120
கலர் செவ்வந்தி - ரூ.320
அரளி -ரூ.200
ரோஜா - ரூ.240
மல்லிகை - ரூ.1,200
என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பொதுவாக ஓணம் பண்டிகைக்கு கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான பூக்கள்(மல்லி, முல்லை, கலர் பூக்கள்) ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள்என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும் முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மல்லி, முல்லை பூக்களுக்கு வரும் 8ஆம் தேதி வரை நல்ல விலை இருக்கும். முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும் போது இன்னும் விலை அதிகரிக்கும்.
கலர் பூக்களை பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படும். இது வருடத்திலேயே மிக பெரிய கலர் பூக்கள் வியாபாரம். 8ம் தேதி வரை விலை உயர்வு இருக்கும்.
கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும். ரோஜா, அரளி ஆகியவை சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும்.மல்லி முல்லை ஆகியவை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்கள் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளாவில் மழை இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்றைய பூக்கள் விலை நிலவரம்:
செண்டுமல்லி - ரூ.60
வெள்ளமல்லி - ரூ.240
வாடாமல்லி - ரூ.120
கலர் செவ்வந்தி - ரூ.320
அரளி -ரூ.200
ரோஜா - ரூ.240
மல்லிகை - ரூ.1,200
என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.