விநாயகர் சதுர்த்தி: திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் 1,200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1200 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்து பூஜை செய்தும், கோவில்களுக்கு சென்றும் விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இந்து முன்னணி சார்பில் 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.



இதுதவிர பல்வேறு இந்து அமைப்புகளும் விதம்விதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.



இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் குபேர விநாயகர் சிலை, அரண்மனை புதூரில் வில் அம்புடன் கூடிய ராமாவதார விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.



இதேபோல், காய்கறி மார்க்கெட் பகுதியில் யானை மீது அமர்ந்து இருக்கும் 18 அடி உயர கஜராஜ விநாயகர் சிலை என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.



மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கபப்ட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை முதல் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் படைத்து சாமி தரிசனம் செய்தனர். பலவேறு பகுதிகளில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...