இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆறுமுகம் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்ஒன்றிய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக, மாநிலம் தழுவிய போராட்டத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆறுமுகம் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உத்தேச மின் கட்டண உயர்வை அமல்படுத்த மாநில அரசை நிர்பந்திக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளின் வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இதன் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மத்திய அரசுக்கு எதிராக, மாநிலம் தழுவிய போராட்டத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆறுமுகம் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உத்தேச மின் கட்டண உயர்வை அமல்படுத்த மாநில அரசை நிர்பந்திக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளின் வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.